Thursday, September 30, 2010

Place of Meraj of Holy Prophet (SAW)


This is the place from where Prophet Mohammed Sallahu Alahi Wasallam ascended to the skies on Meraj Night

Wednesday, September 29, 2010

குர்ஆன் வசனம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
படைத்தல், உணவளித்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் அல்லாஹ்வால் மாத்திரமே!
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே
பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா?
அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும்
உயர்ந்தவன். (அல்குர்ஆன்: 30:40)

*காலத்தை வீணடித்தவனின் பயனற்ற இறுதி நேர புலம்பல்!*
'இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமாயின் இறைவா! நான் விட்டு வந்துள்ள உலகத்திற்கு என்னை மீண்டும் அனுப்பு. அப்படி அனுப்பினால் அங்கு நான் நற்செயல் செய்வேனே என்று கூறத் தொடங்குவான்!' (அல்குர்ஆன்: 23: 99-100)

*துன்ப நிலைக்குப் பிறகு வரும் நல்ல நிலமையில் அல்லாஹ்வை மறக்கும் மனிதன்!

பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்;
நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன"
என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில்
அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம். (அல்குர்ஆன்: 7:95)

*அல்லாஹ்விடத்தில் அழியாத வியாபாரமாகிய மூன்று செயல்கள்!
எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப் படுத்துவான்.
நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான். (அல்குர்ஆன்:
35:29-30)

மறைவானவற்றின் அதிபதி அல்லாஹ்வே!
மறைவானவற்றின் சாவிகள் (அல்லாஹ்வாகிய) அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன்: 6:59)

Wednesday, September 22, 2010

பெண்மை புகழ் காக்க


அஸ்ஸலாமு அலைக்கும்,

மங்கையின்

மறைந்திருக்கும் அவயங்களை

முறைத்துப் பார்த்துச் செல்லும்

உலகம் திறந்துக்காட்டச் சொல்லும்!

இழுத்துப்போர்த்தி நடந்துச்சென்றால்

அடிப்படைவாதி என்றேச் சொல்லும்;

அடிமைசாசனம் செய்யும்!

சமத்துவம் சொல்லும்

பள்ளியிலே மதத்துவேசம் நடக்கும்;

எதிர்த்து நின்றுக் குரல் கொடுத்தால்

இல்லையென்றே நடிக்கும்!

அவிழ்த்துப் பார்க்க

ஆசைப்படும் அவல

நிலையைப்பாருங்கள்!

என் பிள்ளைப் போர்த்திச் சென்றால்

இவனுக்கென்ன கேளுங்கள்!

அழகைக் காட்டிச் சென்றால்

”உச்” கொட்டும் உலகம்;

ஒரு நாள்

”இச்”கொட்டத் துணியும்;

பெண்மை புகழ் காக்க

புர்க்கா உண்டு தாமதிக்காதீர்கள் இனியும்!

-யாசர் அரஃபாத்

Sunday, September 19, 2010

Affirmations for Self-discovery and Self-expression:

Affirmations for Self-discovery and Self-expression:
I take time to know myself.
I take time to decide what do I really want, and to set up a plan to reach my goals.
I take time to care about myself and my personal needs.
I take time to express love to the people around me.
I take time to be thankful for all the good things in my life.

Today's Quote:
Failure is an experience which awakens us.
Success is an experience which energises us to strive for a higher and greater success.
Sri Chinmoy

Thursday, September 16, 2010

சிந்திக்க, செயல்பட சில நபி மொழிகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)
*

*கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!*

*யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ்
எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)*

*சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!*

*“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு
வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)*

*சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!*

*‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று
கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும்
(சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)*

*நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!*

*ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக
ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே
மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள்
அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம்
இருக்கும். (திர்மிதீ)*

*நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?*

*‘எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி
கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)*

*மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!*

*மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்)
அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’
(திர்மிதீ)*

*உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!*

*உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம்
சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)*

*கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!*

*யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை
அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல்
ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை
அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)*

*பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!*

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*

*இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு
பொறுப்பேற்பார்கள்!*

*“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு
வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)*

*நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!*

*“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள்
(ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்”
(புகாரி)*

*நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!*

*எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில்
கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்)
அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.*

*விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!*

*எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு
வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு
வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.*

*ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!*

*ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)*

*சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!*

*“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ
அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.*