Saturday, March 20, 2010

பெரியார்தாசன் இப்போ அப்துல்லாஹ்!


சவூதி அரேபியாவுக்குப் போய் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறியிருக்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன்! ஜித்தாவில் இருந்து மெக்கா போகும் வழியில் ஒரு பள்ளிவாசலில் முஸ்லிமாக மாறி, உம்ரா கடமையை முடித்துவிட்டு தாய்நாடு திரும்பியிருக்கிறார் பெரியார்தாசன். ஏன் இந்த முடிவு? என்று கேட்பவர்களுக்கு ''கடவுள் மறுப்பு கொள்கையை நான் நிறுத்தி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் பெரியாரின் சுயமரியாதை, பெண்ணடிமை, சாதி மறுப்பு கொள்கைகளில் இப்போது உறுதியாக இருக்கிறேன். இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல... பத்தாண்டுகளாகத் திட்டமிட்டே இப்போது 'அப்துல்லாஹ்' ஆகியிருக்கிறேன். என்னுடைய சொந்தப் பணத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து மெக்கா சென்று உம்ராவை முடித்திருக்கிறேன்!'' என்று பளிச்செனச் சொல்கிறார் அப்துல்லாஹ்!

No comments:

Post a Comment