Monday, May 31, 2010

முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகை

ஆய்வு உதவித்தொகைகள்

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகை

(அ) முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகையின் கீழ் மாதந்தோறும் ரூ.12,000/- இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். இதரச் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.12,000/- அளிக்கப்படும்.

(ஆ) விண்ணப்பிப்பவர் ஏதாவது ஒரு நிறுவனத்திலோ பல்கலைக்கழகத்திலோ முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான சான்று விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும்.

(இ) மொழி, மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், இசையியல், நிகழ்த்துகலைகள், வழக்காற்றியல், கட்டடவியல், கல்வெட்டியல், மெய்ப்பொருளியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டத் தேர்ச்சி (முதல் வகுப்பில் அல்லது உயர் இரண்டாம் வகுப்பில்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பையும் பழங்குடி வகுப்பையும் சார்ந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் தளர்த்தப்படும்.

(ஈ) தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகள், ஒப்பிலக்கியம், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, உலக மொழிக் குடும்பங்கள், மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில் பண்டைக்காலத் தமிழோடு தொடர்புபடுத்தி ஆய்வுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

(உ) விண்ணப்பிப்பவர் 10.06.2010 அன்று 30 வயதைக் கடந்திருக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

(ஊ) எழுத்துத்தேர்வின் மூலமும் அதைத் தொடர்ந்து தக்க வல்லுநர் குழுவைக் கொண்டு நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலமும் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

(எ) பிறந்த தேதி, சாதி, கல்வித்தகுதி, முனைவர் பட்ட ஆய்வுக்கான பதிவு ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். முழுமையான வடிவிலின்றி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டா.

(ஏ) விண்ணப்பப் படிவங்களை நிறுவனத்தின் இணையத்தளத்திலிருந்து (www.cict.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது நிறுவனத்திலிருந்து நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பம் 10-06-2010 க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு வந்துசேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

இயக்குநர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
பாலாறு இல்லம், 6, காமராசர் சாலை
சேப்பாக்கம், சென்னை - 600 005

Think about how Jannat is beautiful for Momin.

When Mu'min will enter into Jannah, it will be announced
1. You will remain healthy forever, disease will never come.
2. You will remain alive for ever, death will never come.
3. You will remain in bounties which will never be finished.

Jannat is made with
Bricks of Gold and Silver.
Its cement is of perfumed Musk.
Its chips are pearls and Yaqoot.
Its sand is Zafraan.

There are eight doors ofJannah. These are eight grades of Jannat
1. Jannatul Mava
2. Darul Maqaam
3. Darul Salaam
4. Darul Khuld
5. Jannat-ul-Adan
6. Jannat-ul-Naeem
7. Jannat-ul-Kasif
8. Jannat-ul-Firdous

Food of Jannah
They will eat foods and fruits continuously up to 40 years.
Every bowl will have a new taste.
They will take eructation which will digest the food and there will be perfumed sweating for the digestion of water.
There will be no urine and stool.

Place Name
There will be gardens in Jannah.
Every garden will have the length of about 100 year's journey.
The shadow of these gardens will be very dense.
Their plants will be free of thorns.
The size of their leaves will be equal to ears of elephants.
Their fruits will be hanging in rows.

Jannatul Mava is in the lowest,
Jannat-ul-Adan is the middle &
Jannat-ul- Firdous is on the highest.

Those who love each other for the sake of Allah will get a pillar of Yaqoot,
On which there will be seventy thousand (70,000) rooms.
These will shine for the residents of Jannah as the sun shines for the residents of Duniya.

There will be rooms in Jannah in such a way that every room will have seventy thousand (70,000) dinning sheets.
On every dinning sheet 70,000 types of foods will be served.
For their service 80,000 young boys will be moving around looking like beautiful scattered pearls.

One bunch of dates will be equal to the length of 12 arms.
The size of a date will be equal to the big pitcher.
These will be whiter than milk, sweeter than honey and softer than butter and free
Of seeds.
The stem of these plants will be made up of gold and silver.
There will also be gardens of grapes. The bunches of grapes will be very big.
The size of a single grape will be equal to a big pitcher.

Someone asked, ya Rasulullah (Sallalahu alaihi wasallam):
will it be sufficient for me and my family. It was answered, it will be sufficient for you and your whole tribe.

The Dresses of Jannat
The dress of Jannah will be very beautiful.
One will wear 70 dresses at a time.
These will be very fine, delicate, weightless, having different colors.
These dresses will be so fine that the body even the heart will be visible.
And the waves of love in the hearts will also be visible.
These dresses will never become old, never be dirty and will never tear.

There will be four canals in every Jannah.

1. Water
2. Milk
3. Honey
4. Sharabun Tahoora.

There will also be three fountains in Jannah:
1. Kafoor
2. Zanjabeel
3. Tasneem

Qualities of People of Jannah
In Jannah, height of every Mo 'min, will be equal to the height of
Hazrat Adam (Alaihissalaam) 60 arms (90 feet).
Beauty will be like that of Hazrat Yousuf (Alaihissalaam)
Age of youth will be like that of Hazrat Esa (Alaihissalaam) 30-33 years).
Sweetness of voice will be like that of Hazrat Dawud (Alaihissalaam).
Tolerance will be like that of Hazrat Yaqoob (Alaihissalaam)
Patience will be like that of Hazrat Ayyub (Alaihissalaam.)
Habits will be like that of Sayyaduna Muhammad (Sallalahu alaihi wasallam)

NOTE:
If a person makes Du'a for Jannah three times,
Jannah requests Allah that O, Allah; make his entry into Jannah.
And if a person makes Du'a for safety from Jahannum three times,
The Jahannnum requests Allah that, O, Allah; save him from Jahannum.

Please pass on and may Allah grant the entire Ummah of Nabi sallalahu alayhi wasallam Jannat ul Firdous Ameen!

Every good act is charity
JAZAK ALLAHU KHAIR-

May Allah Forgive our sins...Ameen
Remember the Prophet PBUH said if you have knowledge pass it on
Even if it is just one verse. So Forward this message and help us in our
Mission to keep the Muslim Youth on the right path, ISLAM.

Sunday, May 30, 2010

PROPHET MOHAMMED'S (S.A.W.S) DIET






Benefits:
- Milk contains vitamins and minerals that fruits have.
- Pressed Dates help the liver resist toxic elements using the anti-toxic or antibiotics that the dates contains.
- Pressed dates help the body get rid of the harmful chemical elements that the body has to deal with, like the lead that a high rate of it in the body can cause renal failure.

















Saturday, May 29, 2010

Importants Nokia Code


On the main screen type in:*#06# for checking the IMEI (International Mobile Equipment Identity).
*#7780# reset to factory settings.
*#67705646# This will clear the LCD display(operator logo).
*#0000# To view software version.
*#2820# Bluetooth device address.
*#746025625# Sim clock allowed status.
#pw+1234567890+1# Shows if sim have restrictions.
*#92702689# - takes you to a secret menu where you may find some of the information below:1. Displays Serial Number.2. Displays the Month and Year of Manufacture3. Displays (if there) the date where the phone was purchased (MMYY)4. Displays the date of the last repair - if found (0000)5. Shows life timer of phone (time passes since last start)
*#3370# - Enhanced Full Rate Codec (EFR) activation. Increase signal strength, better signal reception. It also help if u want to use GPRS and the service is not responding or too slow. Phone battery will drain faster though.
*#3370* - (EFR) deactivation. Phone will automatically restart. Increase battery life by 30% because phone receives less signal from network.
*#4720# - Half Rate Codec activation.
*#4720* - Half Rate Codec deactivation. The phone will automatically restart
If you forgot wallet code for Nokia S60 phone, use this code reset: *#7370925538#Note, your data in the wallet will be erased. Phone will ask you the lock code. Default lock code is: 12345Press *#3925538# to delete the contents and code of wallet.Unlock service provider: Insert sim, turn phone on and press vol up(arrow keys) for 3 seconds, should say pin code. Press C,then press * message should flash, press * again and 04*pin*pin*pin# \
*#7328748263373738# resets security code.Default security code is 12345Change closed caller group (settings >security settings>user groups) to 00000 and ure phone will sound the message tone when you are near a radar speed trap. Setting it to 500 will cause your phone 2 set off security alarms at shop exits, gr8 for practical jokes! (works with some of the Nokia phones.) Press and hold "0" on the main screen to open wap browser.

Tuesday, May 25, 2010

Be careful with this book

!!!!! Be careful with this book!!!!!! This thing has to be spread to the
whole world. We must fight this nasty which was created by Christians!!!
* DO NOT let them to convert many more MUSLIM to CHRISTIANITY , Na'udzubillahimindzalik....
* DO NOT JUST KEEP this mail in your mailbox. FORWARD TO ALL OUR MUSLIMS..
The things they do to lead Muslims astray is unbelievable. May Allah
protect us all. Let all your relatives/friends know that this book
do exist and a copy of it was already sent to MUIS for action.








Above: 'The True Furqan'
You Cant Ignore this or send it to as many muslims as u can. The new AMERICAN Quran: a dangerous trick. A new Quran is being distributed in Kuwait, titled 'The True Furqan'. It is being described as the ayats of the Shaytan and Al-Furqan weekly magazine has found out that the two American printing Companies; 'Omega 2001' and 'Wine Press' are involved in the publishing of 'The True Furqan', a book which has also been titled 'The 21st Century Quran'! It has over 366 pages and is in both the Arabic and English languages...it is being distributed to our children in Kuwait in the private English schools! The book contains 77 Surats, which include Al-Fatiha, Al-Jana and Al-Injil. Instead of Bismillah, each Surat begins with a longer vesion of this incorporating the Christian belief of the three spirits. And this so called Quran opposes many Islamic beliefs. in one of its ayats it describes having more than one wife as fornication, divorce being non-permissible and it uses a new system for the sharing out of the will, opposing the current one. It states that Jihad is HARAAM. This book even goes as far as attacking Allah, Subhanahu wa Tahala! All this is poisoning our children at approx. price of US $3. Brothers and Sisters, it is up to you whether you all want to forward this message or not! But if this is true and you do forward it, it will benefit all those who read it.

Monday, May 24, 2010

HADITH

A Beautiful Hadith
Rasulullah (Sallallahu alaihe wasallam) said: 'When a man dies and his relatives are busy in funeral, there stands an extremely handsome man by his head. When the dead body is shrouded, that man gets in between the shroud and the chest of the deceased.
When after the burial, the people return home, 2 angels, Munkar and Nakeer(names of two special Angels), come in the grave and try to separate this handsome man so that they may be able to interrogate the dead man in privacy about his faith. But the handsome man says, 'He is my companion, he is my friend. I will not leave him alone in any case. If you are appointed for interrogation, do your job. I cannot leave him until I get him admitted into Paradise '.
Thereafter he turns to his dead companion and says, 'I am the Qur'an, which you used to read, sometimes in a loud voice and sometimes in a low voice. Do not worry. After the interrogation of Munkar and Naker, you will have no grief.'
When the interrogation is over, the handsome man arranges for him from Al-Mala'ul A'laa (the angels in Heaven) silk bedding filled with musk..
Rasulullah (Sallallahu alaihe wasallam) said: 'On the Day of Judgement, before Allah, no other Intercessor will have a greater status than the Qur'an, neither a Prophet nor an angel.'
Please keep forwarding this 'Hadith' to all ....because
Rasulullah (Sallallahu alaihe wasallam) said:
'Pass on knowledge from me even if it is only one verse'.
May Allah bestow this favour on all of us.

Sunday, May 23, 2010

தாடியிலும் தடுமாற்றமா...?

தாடி வைப்பது நபி[ஸல்] அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ளோம். அதனால்தான் சமீபத்தில் கூட ஒரு மாணவன் தான் பயிலும் கல்வி நிலையம் தாடி வைப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து கோர்ட்டு சென்றதால் கல்வி நிலையத்தால் நீக்கப்பட்டு, பின்பு கோர்ட்டு அந்த மாணவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதையும், இதன் மூலம் அந்த மாணவன் தனது மார்க்க உரிமையை நிலைநாட்டியதையும் நாம் அறிவோம். இது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களில் தாடி வைப்பவர்கள் மிக குறைவாக இருந்தாலும், தாடி எந்த அளவு வைப்பது எனபதில் கருத்து வேறுபாடு கொள்வதில் நிறைவாகவே உள்ளனர்.
காரணம் அவர்கள் எந்த அறிஞரிடம் தாடியின் அளவு பற்றி கேட்கப்படுகிறதோ , அந்த அறிஞர் தான் வைத்திருக்கும் தாடியின் அளவை ஒட்டியே ஃபத்வா வழங்குவதால் இந்த குழப்பம் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக பீஜே என்பவர் வைத்திருக்கும் தாடியின் அளவு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு அவ்வாறு வைப்பதுதான் வசதிப்படுகிறது என்பது அவரது நிலையாக இருக்குமானால், அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள விஷயம். ஆனால், இவர் தான் எந்த அளவு தாடி வைத்துள்ளாரோ அதையே மார்க்கத்தின் அளவாக காட்ட முற்படுகிறார்.
மும்பையில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தாடி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தாடி வைக்கவேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அளவு என்று வரையறுத்து சொல்லப்படவில்லை எனவே தலைமுடி பற்றி ரசூல்[ஸல்] சொன்னதன் அடிப்படையில் நாங்கள் தாடியின் அளவு பற்றி முடிவெடுத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு,ஒரு சிறுவன் பாதி தலையை சிரைத்து பாதி முடி வைத்தவனாக வருகிறான். அவனை பார்த்த நபி[ஸல்] அவர்கள், என்ன இது..? ஒன்னு முழுசா முடிவை! இல்லன்னா முழுசா சிரை[அதாவது மொட்டை போடு] என்று சொன்னார்கள். [இது எந்த நூலில் உள்ளது என்று அவர் குறிப்பிடவில்லை] இதிலிருந்து என்ன வெளங்குது..? முழுசா முடியை விடு அப்பிடீன்னு நபியவர்கள் சொன்னதுனால தலைல முடிய வெட்டாம விட்டா பொம்பள மாதிரி வளந்துரும்.
அப்புறம் சடை போடலாம். பின்னல் பின்னலாம். இப்படி எடுத்துக்கொள்வதா? இந்த மாறி யாரும் இந்த விஷயத்தை எடுத்துக்கிறது கெடயாது.
இதே மாரிதான் தாடிய முழுமையா விடுங்கள் என்றால் என்ன அர்த்தம்னா..? அகல வாக்கில் ஒதுக்காமல் முகத்தில் தாடி எந்த அளவு படர்ந்துள்ளதோ அதை ஒன்றும் செய்யாமல், நீள வாக்கில் அவரவர் தமக்கு எது அழகு என்று கருதுகிறாரோ அந்த அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இவர் சுட்டிக்காட்டியதற்கு ஒப்பான ஒரு செய்தி புஹாரியில் கிடைக்கிறது.
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடுமி ('கஸஉ') வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்' என்று கூறினார்கள்.உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, 'கஸஉ' என்பது அவனுடைய தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியேவிட்டுவிடுவதாகும். (இதுதான் கூடாது).
இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியேவிட்டு விடுவதும் கூடாது' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5920 ]
இந்த செய்தியை கவனமாக படித்தால், இதில் தனது தலையில் பாதியை சிரைத்து பாதியை விட்டுவிடுவது கூடாது[உதாரணம்; சில அய்யர்கள் போன்று] என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தாடியை குறைப்பதற்கு எப்படி சட்டமெடுக்கs முடியும்..? சரி! தாடி சம்மந்தமான் வேறு ஹதீஸ்களே இல்லையென்றால் இதிலிருந்து எதாவது சட்டம் எடுக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் தாடி சம்மந்தமாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளனவே!அல்லாஹ் அருள் மறை குர்ஆனில் கூறுகின்றான்;
(இதற்கு ஹாரூன்;) "என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார்.[அல்குர்ஆன்20:94 ]
நபி மூஸா[அலை] அவர்கள் அல்லாஹ்விடம் வேதம் வாங்குவதற்காக நாற்பது இரவுகள் சென்ற வேளையில் தனது சமூகத்தை தனது சகோதரும் நபியுமான ஹாரூன்[அலை] அவர்களின் பொறுப்பில் விட்டு செல்கிறார்கள். மூஸா[அலை] அவர்கள் திரும்பி வருபோது, மக்கள் சாமிரி என்பவனின் தூண்டுதலால் காளை கன்றை வணங்கியதை அறிந்து கோபமுற்றவர்களாக தனது சகோதரர் ஹாரூன்[அலை] அவர்களின் தாடியையும் தலைமுடியையும் பிடித்தபோது, ஹாரூன்[ சொன்ன வார்த்தைகள் தான் மேல் உள்ளவசனம். இதில் இந்த அதிமேதாவி அளவுக்கு ஹாரூன்[அலை] அவர்களுக்கு தாடி இருந்திருக்குமானால் மூஸா[அலை] அவர்களால் பிடித்திருக்கமுடியுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இந்த அதிமேதாவிகள் இப்படியும் கூறலாம்; அதாவது மூஸா[அலை] மற்றும் ஹாரூன்[அலை] ஆகியோர் முன்னால் வாழ்ந்த நபி மார்கள். எனவே அவர்களை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று. எனவே நபி[ஸல்] அவர்களின் தாடி எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.ஆதாரம்;புஹாரி எண் 5893 ]
இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி[ஸல்] அவர்கள், ஒன்றை நறுக்க சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விட சொல்கிறார்கள் எனில், தாடியில் கை வைக்கக்கூடாது என்பது தெளிவு. அப்படியாயின் தரையை தொடும் அளவுக்கு வளர்க்க சொல்கிறீர்களா என்று சிலர் கேட்கலாம். தாடியை நீங்கள் வெட்டாமல் விட்டால் அது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி வளராது[சிலருக்கு விதிவிலக்காக இருக்கலாம்]. பெண்கள் தங்களின் முடியை வெட்டுவதில்லை. அதற்காக எல்லா பெண்களுக்கும் தரையை தொடும் அளவுக்கு முடியிருக்கிறதா என்றால் இல்லை. எனவே எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம். நிர்பந்தத்திற்கு மார்க்கத்தில் தடையில்லை என்பதை நாம் அறிவோம்.
நபி[ஸல்] அவர்களின் தாடி அளவு;
ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி[ஸல்] அவர்களுடன் சமாதானம் பேச வந்தவர்களில் முதலாமவரான உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர், நபி(ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களின் தாடியைப் பிடித்தபடி இருந்தார். அப்போது முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்) அவர்களின் தலைப்பக்கமாக நின்றிருந்தார்கள். எனவே உர்வா, நபி(ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா(ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, 'உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து" என்று கூறிய வண்ணமிருந்தார்கள். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2731 ]
இந்த ஹதீஸில் உர்வா என்பவர் நபி[ஸல்] அவர்களின் தாடியை பிடிக்கும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் தாடி பெரியதாக இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அபு மஃமர் கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.
ஆதாரம்; புஹாரிஎண் 746 ]
இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடி அசைவை கொண்டு நபி[ஸல்] அவர்கள் ஓதுவதை அறிந்துள்ளனர் சகாபாக்கள். தாடி பெரியதாக இருந்தால்தான் ஓதும்போது தாடி அசையும். இல்லையேல் நாடிதான் அசையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 933 ]
இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடியிலிருந்து நீர் வடிகிறது எனில் தாடி நீளமாக இருந்தாலே இது சாத்தியம். இப்போதுள்ள நவீன வாதிகள் மாதிரி 'சுரண்டி' வைத்திருந்தால் சாத்தியமாகாது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
சஹாபாக்களின் தாடி;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 5283 ]
கண்ணீர் தாடி வழியாக வழிய வேண்டுமானால், பெரியதாடியாக இருந்தாலே சாத்தியம் என்பதை புரிந்துகொள்க. ஆக நபி[ஸல்] அவர்கள் மற்றும் சகாபாக்கள் தாடியை பெரிதாகவே வைத்துஇருந்தனர். அவர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்கு தாடி வைக்கவில்லை என்பது மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கலாம்.
அவ்வளவு ஏன் மடையன் அபூஜஹ்ல் கூட தாடி என்றால் பெரிதாகத்தான் இருக்கவேண்டும் என்று விளங்கியிருந்தான்; பெரிதாகவே தாடி வைத்திருந்தான். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் "அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!" என்று கேட்டார்கள். "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.[புஹாரி எண் 3962 ]
இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், அபூ ஜஹ்ல் உடைய தாடியை பிடித்துக்கொண்டு அவனிடம் பேசுகிறார்கள் எனில், அபூஜஹ்ல் உடைய தாடி அந்த அளவுக்கு பெரிதாக இருந்திருக்கிறது. ஆக தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருக்கவேண்டும் என்று அபூ ஜஹ்ல் விளங்கியது கூட இந்த குர்ஆண்-ஹதீஸ் பேசும் மேதைக்கு விளங்கவில்லை என்பதற்காக அபூ ஜஹ்ல் பற்றியதை குறிப்பிட்டோம் மாறாக ஆதாரத்திற்காக அல்ல.
ஆகவே அன்பானவர்களே! நபி[ஸல்] அவர்களும், சகாபாக்களும் தாடியை பெரிதாகவே வைத்துள்ளார்கள் என்பதற்கு பல்வேறு ஹதீஸ்களை ஆதாரமாக வைத்துள்ளோம். எனவே தாடி சுன்னத் என்பதை உணர்ந்து பெற்றோர்- மனைவி மக்கள் எதிர்ப்பையும் மீறி தாடிவைக்கும்சகோதரர்கள், நபி[ஸல்] அவர்கள் வைத்தது போன்று முழுமையாக தாடி வைக்க முன்வாருங்கள். தனிநபர் மனோ இச்சை அடிப்படையிலான ஃபத்வாக்களை புறந்தள்ளுங்கள். நிர்பந்தம் காரணமாக நீங்கள் தாடியை குறைத்தால் அதுபற்றிய விஷயம் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளதாகும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
-- 10/31/2009 10:57:00 AM அன்று முகவை எக்ஸ்பிரஸ். இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டது
நன்றி Tamil Muslim Brothers

Tuesday, May 18, 2010

மருத்துவ கல்லூரிகளில் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது...

2010 - 2011 ஆம் கல்வி ஆண்டில் 70 இடங்கள் வரை மருத்துவ கல்லூரிகளில் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது...
விண்ணப்ப படிவம்
www.tnhealth.org

Monday, May 17, 2010

Do these five things before going to bed at night‏



Assalamu alaikum.
The Prophet (SWS) one day said to Ali (RA): Ya Ali! Do these five things before going to bed at night:
1. Give 4000 Dinaars in Sadaqa and then sleep
2. Read one complete Quran and then sleep
3. Pay the price for Janna'h and then sleep
4. Make two people happy with each other when they are upset and then sleep
5. Do one hajj and then sleep
Hazrat Ali (RA) said, Ya Rasulallah! This looks impossible, how will I be able to do it? Then the prophet (SAWS) replied:
4 times reading surah Fatiha is equals to four thousand Dinaars giving in Sadaqa.
3 times reading surah Ikhlas (Qul hu Allahu Ahad) is equals to one complete Quran.
3 times reading any durood shareef (Shortest: Sallalaho Alaihi Wa Salam) is the price of jannat.
10 times Astagfirullah (or any istighfar) is equals to making two unhappy people happy with each other.
4 times third Kalima is equals to one hajj. After this Ali (RA) said, Ya Rasulallah (SAWS)! Now I will do all these before going to bed.
My dear brothers and sisters, it takes less then 5 mins for all the above zikr and look at the virtues for it.....who would not want to have all these virtues to be in their book of good deeds. To remind oneself of it, the easiest way is to write down on a piece of paper all the above zikr to be done b4 going to sleep and stick that piece of paper just next to UR bed....and of course Allah is the one to remind.It will be very nice of u if u could Pls forward this to as many Muslims as possible coz if anyone starts doing these Aamaal then there is no doubt that U will also be rewarded for it.
Inshallah.Pls do Dua that Allah guides us to the right path...Please also remember in your prayers/duas to us and all ummat-ul-muslimeen..................Jazakallah Khair?

Tuesday, May 11, 2010

"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்".....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.


"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ளே குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது.

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,
"நீ பைளிளை படித்திருக்கிறாயா"
எனக்கு ஆச்சர்யம், "அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்"
"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை"
நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது. புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், "பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை"
அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.

பிறகு அவர் கூறினார், "நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?"
சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று "Genesis" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.
அதிர்ச்சிகள் பல காத்திருந்தன...
ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள்.
நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?
உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ.................(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).

இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.

நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா? அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்? அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்?
ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?
எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?
புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,
"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது"...
அதையேத்தான் அவரும் கூறினார். "சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது".

சரியென்று "New Testament" டை படிக்க ஆரம்பித்தேன்.
இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே "New Testament"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...
என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.
"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்"
பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,
"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)"
என்ன?
இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?
அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?
என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை.
பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்? நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, "நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.
கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.

அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், "உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்".

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.

நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.
பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்"
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே...

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்"
ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,
"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற "Moon God" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்" என்று என்னென்னவோ இருந்தது.

அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். "நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை"
பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. இரண்டு, முஸ்லிம்கள் என்றால் யார் என்று போட்டிருந்த அந்த புத்தகத்தில், அவர்கள் பகுதி நேர போதை மருந்து வியாபாரிகளாகவும் இருப்பார்கள் என்று போட்டிருக்கவில்லையே?

ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,
"இஸ்லாமைப் பற்றி தெரியுமா?" என்று கேட்டார்..
"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.
"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்"
"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்"
"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்"
"நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?"
"ஆம், அதனால் என்ன?"
"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே"
"என்ன?" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.
"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா"
"ஜும்மாஹ் என்றால்?"
"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது" (அரங்கத்தில் சிரிப்பு)
"எங்கே இருக்கிறது மசூதி?"
அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.

அவருடன் சென்றேன். பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே போனவர்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். அமெரிக்கர்களை காண முடியவில்லை, ஒரே ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரை தவிர.

அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.

என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். "என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா இது அதற்குண்டான செட்அப்பா" ஒருவித பயம்.

பின்னர் குத்பா ஆரம்பித்தது "இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு" என்று ஆரம்பித்தார் இமாம்.
அவ்வளவுதான் பயம் அதிகரித்தது...
"அட கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.

அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, "இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?
குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.
"என்ன செய்யப் போகிறீர்கள்" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.
"தொழ போகிறோம்"
"யாரை"
"இறைவனை"
"எந்த இறைவன்?"
"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை"
என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது. தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.
சஜிதா செய்தார்கள். "ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.

தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.

தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,
"இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?"
"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்"
"அதை நான் படிக்கலாமா"
"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்"
எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.
முஸ்லிம்கள் என்றால் யார், எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.

"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.

கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக் கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.
திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...
இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.

என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?
அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பற்றிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.

இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.
தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.

என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.

நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.

அல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.
இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்"
அல்ஹம்துலில்லாஹ்...
இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம். இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.

நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழ கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Brother Yusha Evans Official website:1. http://yushaevans.com

This Article translated from:1. Br.Yusha Evans speach "How the Bible Led Me to Islam" on 6th Feb,2009 at Majid Omar Al Farouk, Islamic Institute of Orange county, Anaheim, California.

My Sincere Thanks to:1. IIOC Internet committee reproduction.

Sunday, May 9, 2010

Saturday, May 1, 2010

Just Fun


· Project Manager is a Person who thinks nine women can deliver a baby in One month. ·Developer is a Person who thinks it will take 18 months to deliver a Baby.
·Onsite Coordinator is one who thinks single woman can deliver nine babies in one month.
·Client is the one who doesn't know why he wants a baby.
·Marketing Manager is a person who thinks he can deliver a baby even if no man and woman are available.
·Resource Optimization Team thinks they don't need a man or woman; they'll produce a child with zero resources.
·Documentation Team thinks they don't care whether the child is delivered, they'll just document 9 months.
·Quality Auditor is the person who is never happy with the PROCESS to produce a baby.
And last but not least.................
·Tester is a person who always tells his wife that this is not the Right baby